ஆசை வார்த்தை கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை… டிப்ளமோ மாணவர் போக்சோவில் கைது…

 

ஆசை வார்த்தை கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை… டிப்ளமோ மாணவர் போக்சோவில் கைது…

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டையில் ஆசை வார்த்தை கூறி 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த டிப்ளமோ மாணவர் போக்சோ சட்டத்தில் கைதுசெய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த வேல்முருகன் என்பவரது மகன் வெங்கடேசன்(20). இவர் சென்னையில் உள்ள தனியார் தொழில்நுட்ப கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகிறார். இந்த நிலையில், வெங்கடேசன் உளுந்தூர்பேட்டை கார்னேஷன் தெருவை சேர்ந்த 16 வயது சிறுமியை, கடந்த ஓராண்டாக காதலித்து வந்துள்ளார்.

ஆசை வார்த்தை கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை… டிப்ளமோ மாணவர் போக்சோவில் கைது…

அப்போது, சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர், பெண்ணை திருமணம் செய்து கொள்ள கேட்டபோது, அதற்கு மறுப்பு தெரிவித்ததுடன், சிறுமி மற்றும் அவரது பெற்றோருக்கு வெங்கடேசன் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து, அவர்கள் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வெங்கடேசன் மீது கொலை மிரட்டல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, கைதுசெய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.