இன்றைக்கு நான் வாய் திறப்பதாக இல்லை-அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

 

இன்றைக்கு நான் வாய் திறப்பதாக இல்லை-அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனி சாமிதான் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியது சர்ச்சையாகிய நிலையில், இன்றைக்கு வாய் திறப்பதாக இல்லை என அவரே தெரிவித்துள்ளார்.

நேற்று திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “அதிமுகவைப் பொறுத்தவரை அடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான். முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் போட்டி கிடையாது. அடுத்த ஆட்சி அதிமுக தான். அடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தான். வேட்பாளர் யார் என்பதனை முதல்வர் விரைவில் அறிவிப்பார்கள்” எனக் கூறினார். இது கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. கண்டனங்களும் எழுப்பினர். அனைவருக்கும் கட்சி கட்டுப்பாடு நன்றாக தெரியும் எனவே கட்சி விதிகளின்படியே நடந்துகொள்ள வேண்டுமென அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

இன்றைக்கு நான் வாய் திறப்பதாக இல்லை-அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

இந்நிலையில் இன்று ஒட்டன்சத்திரம் அருகே பெத்தேல் புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “கட்சியின் கண்டனம் நியாயமானது, கட்சிக் கட்டுப்பாடு கரெக்டு தான். நான் கட்சியின் மூத்த உறுப்பினர். கட்டுப்பட்டு இருக்கணும் அதனால் இன்னைக்கு வாய் திறப்பதாக இல்லை” என தெரிவித்தார்.