திண்டுக்கல்- கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கட்சியினர் மனு

 

திண்டுக்கல்- கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கட்சியினர் மனு

திண்டுக்கல்

மத்திய அரசின் ஜல்ஜீவன் குடிநீர் திட்ட கட்டணத்தை 3 ஆயிரத்தில் இருந்து ஆயிரம் ரூபாயாக குறைக்க வலியுறுத்தி நேற்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மேலும், அந்த மனுவில் ஜல்ஜீவன் குடிநீர் திட்டத்தில்

திண்டுக்கல்- கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கட்சியினர் மனு

கட்டணத்தை ஆயிரமாக குறைக்கவும், இந்த திட்டத்தில் அனைத்து உட்கடை கிராமங்களையும் விடுபடாமல் இணைத்திட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். மேலும், கிராமப்புற ஊராட்சிகளில் தலித் பெண் பிரதிநிதிகளை உரிய முறையில் மரியாதையுடன் நடத்துவதை உறுதிப்படுத்தவும், மன்ற கூட்டங்களில் பங்கேற்பதை உத்தரவாதப்படுத்தி மதிப்புடன் நடத்தவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.