திண்டுக்கல் ஐ.லியோனி நியமனத்தை மறுபரிசீலனை செய்க : ஓபிஎஸ் கோரிக்கை!!

 

திண்டுக்கல் ஐ.லியோனி நியமனத்தை மறுபரிசீலனை செய்க : ஓபிஎஸ் கோரிக்கை!!

மிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டிருப்பதற்கு ஓபிஎஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில், “பள்ளி மாணவ, மாணவியருக்கு தரமான புத்தகங்கள் கிடைப்பது உறுதி செய்வதும் , தரத்தை மேம்படுத்துவதில் தான் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக முக்கிய நோக்கமாகும். அதாவது ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான தமிழ் மற்றும் ஆங்கில வழி பாடநூல்கள் மேல்நிலை வகுப்பிற்காக தொழில் கல்வி பாடப்புத்தகங்கள், ஆசிரியர் பட்டய பயிற்சி காண பாடபுத்தகங்கள் உள்ளிட்டவற்றை தயாரித்து அவற்றை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இலவசமாகவும், தனியார் பள்ளிகளுக்கு மிகக் குறைந்த விலையிலும் வழங்கி வரும் பணியினை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனத்தால் தற்போது வழங்கப்படும் பாட புத்தகங்கள் மூலம் உலக அளவில் இந்திய அளவில் நடைபெற்ற நிகழ்வுகளின் புரட்சிகளையும், அறிவியல் கண்டுபிடிப்புகளை, இந்திய விடுதலைப் போராட்டத்திற்காக பாடுபட்ட தலைவர்கள் பற்றியும் , விடுதலைப் போராட்டத்திற்கு பிறகு இந்திய திருநாட்டிற்கு பாடுபட்ட தலைவர்கள் பற்றியும் தமிழ் நாட்டுக்காக பாடுபட்ட தலைவர்கள் பற்றியும் ,சமூக நீதி பெண்கள் முன்னேற்றம், வறுமை ஒழிப்பு ஆகியவற்றுக்காக பாடுபட்ட தலைவர்கள் பற்றிய மாணவ ,தெரிந்து கொள்கின்றனர்.

திண்டுக்கல் ஐ.லியோனி நியமனத்தை மறுபரிசீலனை செய்க : ஓபிஎஸ் கோரிக்கை!!

தமிழ்நாட்டு மாணவ, மாணவியரின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் வகையில் வரலாறு, அரசியல், பொது அறிவு ,சமூகவியல், அறிவியல் உள்ளிட்ட பல்வேறு பாடப் புத்தகங்களில் தரமான பாடங்களை படிக்க வைக்கின்ற தமிழர் பண்பாடு மற்றும் நாகரிகத்தை எடுத்துரைக்கின்ற பணியினை மேற்கொண்டு வரும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவராக திண்டுக்கல் லியோனி அவர்களை நியமித்து இருப்பது இந்த கழகத்தின் நோக்கத்தையே சிதைப்பதாக அமைந்துள்ளது. இதன் மூலம் பாடங்களின் தரம் பாதிக்கப்படக் கூடிய சூழ்நிலை உருவாகும்.

பட்டிமன்றம் என்ற போர்வையில் பெண்களை இழிவாக பேசுவதையும், அரசியல் கட்சித் தலைவர்களை வசை பாடுவதும், நாகரீகமற்ற கருத்துக்களை, தவறான கருத்துகளை, ஒழுக்கமற்ற கருத்துக்களை, மக்கள் மனங்களில் குறிப்பாக இளைய சமுதாயத்தினர் மனங்களில் விதைக்க முயற்சி செய்வதை வாடிக்கையாக கொண்டவர் லியோனி. நகைச்சுவை என்ற பெயரில் அரசியல் கட்சி தலைவர்களை அருவருப்பான முறையில் விமர்சிக்கக் கூடிய லியோனி. இவரின் தவறான கருத்துக்கள் மாணவ மாணவியரிடம் எடுத்து செல்லப்படுவதுடன் எதிர்காலம் வெகுவாக பாதிக்கப்படும்.

திண்டுக்கல் ஐ.லியோனி நியமனத்தை மறுபரிசீலனை செய்க : ஓபிஎஸ் கோரிக்கை!!

எனவே தமிழ் நாட்டின் எதிர்காலத் தூண்கள் ஆகிய மாணவ, மாணவியரின் நலனை கருத்தில் கொண்டு, நல்ல கருத்துக்கள் மாணவ மாணவியரை சென்றடைய வேண்டும் என்பதன் அடிப்படையில், இந்த நியமனத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் பெண்களை மதிக்கின்ற ஒருவரை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் தலைவராக நியமிக்க வேண்டுமென்றும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்