திமுக பிரமுகர் முன்விரோதம் காரணமாக வெட்டிக்கொலை

 

திமுக பிரமுகர் முன்விரோதம் காரணமாக வெட்டிக்கொலை

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே முன்விரோதம் காரணமாக திமுக வர்த்தக அணி நிர்வாகி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் சின்னப்பன் என்ற அருண்குமார். பைனான்ஸ் தொழில் செய்து வரும் இவர் திண்டுக்கல் மாவட்ட

திமுக பிரமுகர் முன்விரோதம் காரணமாக வெட்டிக்கொலை

திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளராகவும் உள்ளார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த ஒரு சிலருடன் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றிரவு மேட்டுப்பட்டி காளியம்மன் கோவில்

திமுக பிரமுகர் முன்விரோதம் காரணமாக வெட்டிக்கொலை

அருகே அருண்குமார் சென்றபோது, அடையாளம் தெரியாத மர்மகும்பல் அவரை சுற்றிவளைத்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டியுள்ளனர். இதில், படுகாயமடைந்த அருண்குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து திண்டுக்கல் தெற்கு காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.