கொரோனா பாதித்த பிசியோதெரபி மருத்துவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

 

கொரோனா பாதித்த பிசியோதெரபி மருத்துவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிசியோதெரபி மருத்துவர் ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகேயுள்ள மல்லையாபுரத்தை சேர்ந்தவர் மருத்துவர் சின்னுசாமி. இவர் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிசியோதெரபி மருத்துவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் சின்னுசாமிக்கு சமீபத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று திண்டுக்கல்

கொரோனா பாதித்த பிசியோதெரபி மருத்துவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

அருகேயுள்ள செட்டியபட்டி ரயில்வே கேட் பகுதிக்கு வந்த அவர், கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு அவ்வழியாக சென்னையில் இருந்து நெல்லை நோக்கி சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த ரயில்வே போலீசார், சின்னுசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.