“பொதுமக்களுக்கு உதவ, போலீசார் தயார் நிலையில் உள்ளனர்” – டிஐஜி ரூபேஷ்குமார் மீனா

 

“பொதுமக்களுக்கு உதவ, போலீசார் தயார் நிலையில் உள்ளனர்” – டிஐஜி ரூபேஷ்குமார் மீனா

தஞ்சாவூர்

தஞ்சை, திருவாரூ, நாகை ஆகிய 3 மாவட்டங்களில் புயல் மற்றும் மழையால் பாதிக்கப்படும் பகுதிகளில் பொதுமக்களுக்கு உதவ காவலர்கள் முதல் எஸ்.பி-க்கள் வரை அனைவரும் தயார் நிலையில் இருப்பதாக, தஞ்சை சரக டிஐஜி ரூபேஷ்குமார் மீனா தெரிவித்தார். இதுதொடர்பாக தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள இந்த 3 மாவட்டங்களை சேர்ந்த காவல்துறையினருக்கு ஏற்கனவே விரிவான அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளதாகவும், அத்துடன் பேரிடர் மீட்புக்குழுவினரும் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

“பொதுமக்களுக்கு உதவ, போலீசார் தயார் நிலையில் உள்ளனர்” – டிஐஜி ரூபேஷ்குமார் மீனா

இவற்றை தவிர்த்து மாவட்டந்தோறும் காவல்துறையை சேர்ந்த 120 பேருக்கு நிவாரண மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்கான பயிற்சி வழங்கப்பட்டு இருப்பதாக கூறிய ரூபேஷ்குமார் மீனா, இவர்கள் மற்றத் துறை அதிகாரிகளுடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவித்தார்.