டெல்லியில் பெட்ரோலை முந்திய டீசல் விலை! – வாகன ஓட்டிகள் வேதனை

 

டெல்லியில் பெட்ரோலை முந்திய டீசல் விலை! – வாகன ஓட்டிகள் வேதனை

டெல்லியில் பெட்ரோல் விலையை ஓவர்டேக் செய்து டீசல் விலை உயர்ந்திருப்பது வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெட்ரோல், டீசல் விலையை அரசு நிர்ணயித்த நிலை மாறி, எண்ணெய் நிறுவனங்கள் கைக்கு சென்றதில் இருந்து விலை தாறுமாராக உயர்ந்து வருகிறது. பொதுவாக பெட்ரோல் விலையை விட டீசல் விலை சற்றுக் குறைவாக இருக்கும். ஒரு காலத்தில் பெட்ரோலுக்கும் டீசலுக்கும் இடையே 20, 25 ரூபாய் அளவுக்கு எல்லாம் வித்தியாசம் இருந்தது. இதனால் பலரும் பெட்ரோலில் ஓடும் வாகனத்தை விட்டுவிட்டு டீசலில் இயங்கும் வாகனத்துக்கு மாறினார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக டீசலுக்கு அதிகப்படியான வரி விதிக்கப்பட்டதால் அதுவும் கிட்டத்தட்ட பெட்ரோல் விலைக்கு அருகில் வந்துவிட்டது.

டெல்லியில் பெட்ரோலை முந்திய டீசல் விலை! – வாகன ஓட்டிகள் வேதனைதற்போது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துகொண்டே செல்கிறது. விலை உயர்வு பற்றி கேள்வி கேட்காமல் இருப்பதுதான் தேசபக்தி என்று கூறப்பட்டு வருகிறது. தமிழக முதலமைச்சர் எடப்பாடிதான் தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணம் என்று கூட மோடி ஆதரவாளர்கள் வதந்தியை பரப்பினார்கள்.

டெல்லியில் பெட்ரோலை முந்திய டீசல் விலை! – வாகன ஓட்டிகள் வேதனைதற்போது டெல்லியில் டீசல் விலை பெட்ரோல் விலையை விட அதிகமாக உள்ளது. அங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.79.76 ஆகவும் டீசல் விலை ரூ.79.88 ஆகவும் உள்ளது. இதனால் விலைவாசி உயரும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அரசின் காதில் இதை சொல்வது யார் என்றுதான் தெரியவில்லை.