’இதுதான் உங்கள் கடைசி போட்டியா?’ கேள்விக்கு தோனியின் சூப்பர் பதில்!

 

’இதுதான் உங்கள் கடைசி போட்டியா?’ கேள்விக்கு தோனியின் சூப்பர் பதில்!

ஐபிஎல் திருவிழாவில் இன்று இரண்டு போட்டிகள்  முதல் போட்டி – அணிகள் சென்னை சூப்பர் கிங்ஸ் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப்.

 13 போட்டிகளில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 8 போட்டிகளில் தோற்றும் 5-ல் மட்டுமே வென்றதால், பாயிண்ட் டேபிளில் கடைசி இடமான எட்டில் உள்ளது.

’இதுதான் உங்கள் கடைசி போட்டியா?’ கேள்விக்கு தோனியின் சூப்பர் பதில்!

கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை பொறுத்தவரை 13 போட்டிகளில் ஆடி, 6 போட்டிகளில் வென்று 5-ம் இடத்தில் உள்ளது. இன்றைய வெற்றி என்பது அந்த அணிக்கு மிகவும் கட்டாயமான ஒன்று.

இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு இதுவே கடைசி போட்டியாக இருக்கும். பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் போன ஒரே சீசன் இதுவே. அதனால், தோனியின் கேப்டன்ஷிப் பற்றிய கேள்விகள் எழுப்பப்பட்டன. அவர் கேதார் ஜாதவை அதிகம் பயன்படுத்தியது பற்றி விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.

’இதுதான் உங்கள் கடைசி போட்டியா?’ கேள்விக்கு தோனியின் சூப்பர் பதில்!

மேலும், இந்த சீசன் தொடங்குவதற்கு முன் தோனி தனது ரிட்டர்யமெண்ட்டை அறிவித்திருந்தார். அதனால், அடுத்த ஆண்டு சென்னை அணியில் இடம்பெற மாட்டார் என்று யூகங்கள் வெளியாகின. அதை சென்னை அணி நிர்வாகம் மறுத்தது.

’இதுதான் உங்கள் கடைசி போட்டியா?’ கேள்விக்கு தோனியின் சூப்பர் பதில்!

 இந்நிலையில் போட்டித் தொடங்குவதற்காக டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் மஹேந்திர சிங் தோனி, முதலில் பீல்டிங் செய்ய விரும்புவதாகச் சொன்னார். வர்ணனையாளர் டேரி மோரிசன் தோனியிடம், “மஞ்சள் ஜெர்சியில் இதுதான் உங்களின் கடைசி போட்டியா?” என்று கேட்டார்.

இந்தக் கேள்வி பலரால் பலமுறை எழுப்பப்பட்டது. அதனால், அதற்கு என்ன பதில் சொல்வார் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தார்கள்.

’இதுதான் உங்கள் கடைசி போட்டியா?’ கேள்விக்கு தோனியின் சூப்பர் பதில்!

அதற்கு தோனி சிரித்துக்கொண்டே ‘நிச்சயமாக இல்லை’ என்றார். அதனால் ரசிகர்கள் உற்சாகத்தோடு இந்தப் போட்டியைக் கண்டு வருகின்றனர்.