தர்மபுரி- வீட்டில் பதுக்கிவைத்து கஞ்சா விற்பனை – இளைஞர் கைது
Oct 13, 2020, 16:48 IST1602587915000
தர்மபுரி
தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளியில் வீட்டில் கஞ்சா பதுக்கி விற்பனை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
பாலக்கோடு வட்டம்
மாரண்டஹள்ளியில் உள்ள போயர் தெருவில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற, போலீசார், அப்பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். இதில், திருப்பதி என்ற இளைஞர் வீட்டில் கஞ்சா பதுக்கி விற்பனை செய்து வருவது தெரியவந்தது. அவரது வீட்டில் இருந்து 600 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், திருப்பதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.