நுகர்பொருள் வாணிப கிடங்கில் சோதனை; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி !
Nov 11, 2020, 11:50 IST1605075637000
தர்மபுரி
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத 21 ஆயிரம்
ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தீபாவளியை ஒட்டி லஞ்சம் பெறுவதாக கிடைத்த தகவலின் பேரில், பாலக்கோடு நுகர்பொருள் வாணிபக் கழக
கிடங்கில் நேற்று மாலை 5 மணியளவில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீரென சோதனை நடத்தினர். லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி நடராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த சோதனை இரவு 9.30 மணி வரை நீடித்தது. இதில், கணக்கில் வராத 21 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, நுகர்பொருள் வாணிப கிடங்கு தர ஆய்வாளர் உட்பட 2 பணியாளர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.