திருநங்கை வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

 

திருநங்கை வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

தர்மபுரி

தர்மபுரி அருகே திருநங்கை வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் ஆகியவற்றை திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அடுத்த முண்டாசு புறவடை பகுதியை சேர்ந்தவர் திருநங்கை பிரவீனா(25). இவர் சொந்த பணிகள் காரணமாக நேற்று வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுள்ளார். வேலைகளை முடித்துக் கொண்டு

திருநங்கை வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

இன்று காலை வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது, பீரோவில் இருந்த 5 ஆயிரம் ரூபாய் பணம், ஒரு ஜோடி வெள்ளி கொலுசுகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் பிரவீனா புகார் அளித்தார். இதனைதொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.