தர்மபுரி: முள்காட்டுக்குள் கஞ்சா விற்ற வாலிபர் கைது; 350 கிராம் கஞ்சா பறிமுதல்

 

தர்மபுரி: முள்காட்டுக்குள் கஞ்சா விற்ற வாலிபர் கைது; 350 கிராம் கஞ்சா பறிமுதல்

பாலக்கோடு பகுதியில்  முள்காட்டுக்குள் கஞ்சா விற்று வந்த வாலிபரை போலீசார் விரட்டிப் பிடித்து கைது செய்தனர்.

தர்மபுரி: முள்காட்டுக்குள் கஞ்சா விற்ற வாலிபர் கைது; 350 கிராம் கஞ்சா பறிமுதல்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகில் உள்ளது தண்டுக்காரனஹள்ளி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த நந்தீஷ்(21) என்ற வாலிபர் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் பின்புறம் முள்காட்டுக்குள் இருந்தபடி கஞ்சா விற்று வருவதாக பாலக்கோடு போலீஸுக்கு ரககிய தகவல் வந்தது. உடனே போலீஸார் அப்பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர். போலீசாரைக் கண்டதும் நந்தீஷ் தப்பி ஓட முயற்சி செய்தார். ஆனால், போலீசார் அவரை விரட்டிப் பிடித்தனர். அவரிடம் இருந்து 350 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

தர்மபுரி: முள்காட்டுக்குள் கஞ்சா விற்ற வாலிபர் கைது; 350 கிராம் கஞ்சா பறிமுதல்