மதுபாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்த பெண் கைது

 

மதுபாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்த பெண் கைது

தர்மபுரி

தர்மபுரி அருகே முறைகேடாக மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த பெண்ணை போலீசார் கைதுசெய்தனர். தர்மபுரி வெண்ணாம்பட்டி அடுத்த குள்ளனூர் பகுதியில் மதுபாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக தர்மபுரி பி1 காவல்நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதை

மதுபாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்த பெண் கைது

தொடர்ந்து, உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி தலைமையிலான குழு அப்பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். இதில், அப்பகுதியைச் சேர்ந்த கல்யாணி(40) என்பவர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைதுசெய்த போலீசார், அவரிடம் இருந்து 30 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.