தர்மபுரி- தீக்குளித்த பல்கலை. மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

 

தர்மபுரி- தீக்குளித்த பல்கலை. மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

தர்மபுரி

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே வயிற்று வலி காரணமாக தீக்குளித்த பல்கலைக்கழக மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஏரியூர் அருகிலுள்ள ராமகொண்ட அள்ளி கிராமத்தை சேர்ந்த மாரப்பன் என்பவரது மகள் அஜந்தா(22). சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு எம்.எஸ்சி படித்து வந்தார்.

தர்மபுரி- தீக்குளித்த பல்கலை. மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

இந்நிலையில், தொடர் வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்த அஜந்தா, சில நாட்களுக்கு முன்பு வீட்டில் மண்ணெண்ணையை ஊற்றிக்
கொண்டு தீக்குளித்தார். இதில், பலத்த தீக்காயமடைந்த அவரை குடும்பத்தார் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள்
தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து ஏரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து
வருகின்றனர்.