கிணற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி

 

கிணற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி

தர்மபுரி

தர்மபுரி அருகே கிணற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரூர் வட்டம் கொளகம்பட்டி கிராமத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரது மகன் தங்கம்(20).

கிணற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி

இவர் எருமியாம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்த அவர், நேற்று நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள கிணற்றுக்கு குளிக்க சென்றுள்ளார். 80 அடி ஆழமுடைய அந்த கிணற்றில் குளித்துபோது திடீரென தங்கம் தண்ணீரில் மூழ்கியுள்ளார்.

கிணற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி

நண்பர்கள் அவரை தேடிப்பார்த்தும் மீட்க முடியாத நிலையில், இதுகுறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணிநேர போராட்டத்திற்கு பின் தங்கத்தின் உடலை மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக அரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.