தர்மபுரி- +1 மாணவி கடத்தல் – 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை

 

தர்மபுரி- +1 மாணவி கடத்தல் – 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை

தர்மபுரி

தர்மபுரி அருகே கால்நடை மேய்க்க சென்ற +1 மாணவியை காரில் கடத்திச்சென்ற விவகாரத்தில் 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கும்பாரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. அருகிலுள்ள அரசுப்

தர்மபுரி- +1 மாணவி கடத்தல் – 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை

பள்ளியில் +1 படித்து வருகிறார். கொரோனா காரணமாக வீட்டில் இருந்து வந்த மாணவி, அப்பகுதியில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, காரில் வந்த மர்மகும்பல் ஒன்று அவரை கடத்திச் சென்றுள்ளது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில்

காரிமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மாணவியை கடத்தியவர்கள் தட்டாரஅள்ளி பகுதியை சேர்ந்த சக்திவேல்(22), அவரின் தந்தை பச்சையப்பன்(47), தாயார் முனியம்மாள்(41) உள்ளிட்ட 5 பேர் என தெரியவந்தது. இதனையடுத்து, அவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்த போலீசார் சிறுமியை தொடர்ந்து தேடி வருகின்றனர்.