சங்கரநாராயணசாமி கோயிலில் ஆடித்தபசு விழாவுக்கு பக்தர்கள் அனுமதியில்லை

 

சங்கரநாராயணசாமி கோயிலில் ஆடித்தபசு விழாவுக்கு பக்தர்கள் அனுமதியில்லை

அருள்மிகு சங்கர நாராயணசாமி கோயிலில் ஆடித்தபசு விழாவையொட்டி ஜூலை 23 ஆம் தேதி பொதுமக்களுக்கு தரிசனம் செய்ய அனுமதியில்லை என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சங்கரநாராயணசாமி கோயிலில் ஆடித்தபசு விழாவுக்கு பக்தர்கள் அனுமதியில்லை

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “தென்காசி மாவட்டம், சங்கரன்கோயில் வட்டம் மற்றும் நகரத்தில் அமைந்துள்ள அருள்மிகு சங்கர நாராயணசாமி கோயிலில் ஆடித்தபசு விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த ஆண்டில் அரசின் வழகாட்டு நேறிமுறைகளின் படி பக்தர்கள் அனுமதியின்றி பூஜைகள் மட்டும் நடைபெற்றுவருகிறது.

மேற்படி, நிகழ்ச்சிகளை பொதுமக்கள் காணும் வகையில் யூடியூப் தொலைக்காட்சி வாயிலாக நேரலையில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசாமி திருக்கோயிலில் ஆடித்தபசு வாழை முன்னிட்டு ஜூலை 23 ஆம் தேதி பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை

மண்டகப்படி பூஜை நேரத்தின்போது மட்டும் அன்றைய தினத்திற்குரிய மண்டகப்படிதாரர்கள் அடையாளர் சீட்டுடன் அனுமதிக்கப்படுவர். பொதுமக்கள் வசதிக்காக ஜூ;லை 23 ஆம் தேதி மேற்படி பூஜை நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி மற்றும் யூடியூப் வாயிலாக நேரலையாக காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் கோயிலுக்கு வருகை புரிவதை தவிர்த்து முழு ஒத்துழைப்பு அளிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.