சூரசம்ஹார நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை!

 

சூரசம்ஹார நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை!

திருச்செந்தூர் கோயிலில் நாளை நடைபெறும் சூரசம்ஹார நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சூரசம்ஹார நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை!

முருகனின் அறுபடை வீடுகளில் மிகவும் பிரசித்தி பெற்ற கடந்த சஷ்டி விழா கடந்த 15 ஆம் தேதி முதல் தொடங்கியது. இந்த விழாவின் போது பக்தர்கள் விரதமிருந்து சூரசம்ஹார நிகழ்ச்சியை கண்ட பின்பு, முருகனின் திருக்கல்யாணத்தை காண்பது ஐதீகம். அந்த வகையில் 6 ஆம் நாளான நாளை சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

சூரசம்ஹார நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை!

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளையும், திருக்கல்யாணம் நாளை மறுநாளும் நடக்கிறது. இதில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா காரணமாக கோயில் வளாகத்திற்குள் பல முருகன் கோயில்களிலில் நாளை சூரசம்ஹாரம் நடைபெறும் என்று தெரிகிறது.