சஞ்சய் ரவுத் காலையில் ஒன்னு பேசுகிறார்.. இரவில் வேறு ஏதாவது பேசுகிறார்.. பா.ஜ.க. தலைவர் கிண்டல்

 

சஞ்சய் ரவுத் காலையில் ஒன்னு பேசுகிறார்.. இரவில் வேறு ஏதாவது பேசுகிறார்.. பா.ஜ.க. தலைவர் கிண்டல்

அவரு காலையில் ஒன்னு பேசுகிறார், இரவில் வேறு ஏதாவது பேசுகிறார் என்று சிவ சேனா எம்.பி. சஞ்சய் ரவுத்தை பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னாவிஸ் கிண்டலடித்தார்.

மகாராஷ்டிராவில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க.-சிவ சேனா கூட்டணி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றியது. இதனையடுத்து பா.ஜக. கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிவ சேனா ஆட்சியில் பங்கு கேட்டது. ஆனால் அதற்கு பா.ஜ.க. மறுத்து விட்டது. இதனையடுத்து பா.ஜ.க.வுடான கூட்டணியை சிவ சேனா முறித்து கொண்டது. மேலும் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் சிவ சேனா கூட்டணி அமைத்து மகாராஷ்டிராவில் ஆட்சியை பிடித்தது. பா.ஜ.க. எதிர்க்கட்சியாக உள்ளது.

சஞ்சய் ரவுத் காலையில் ஒன்னு பேசுகிறார்.. இரவில் வேறு ஏதாவது பேசுகிறார்.. பா.ஜ.க. தலைவர் கிண்டல்
சிவ சேனா

இந்த சூழ்நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பின்போது பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது: அரசியலில் எந்தவிதமான சலனங்களும் இல்லை. நடைமுறையில் உள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்ப முடிவுகள் எடுக்கப்படுகின்றன. சிவ சேனாவுடன் எங்களுக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் நாங்கள் எதிரிகள் அல்ல. சிவ சேனா எங்களுடன் தேர்தலில் போட்டியிட்டது, தேர்தல் முடிவுகளுக்கு பிறகு காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசுடன் கைகோர்த்தது.

சஞ்சய் ரவுத் காலையில் ஒன்னு பேசுகிறார்.. இரவில் வேறு ஏதாவது பேசுகிறார்.. பா.ஜ.க. தலைவர் கிண்டல்
சஞ்சய் ரவுத்

சிவ சேனா எம்.பி. சஞ்சய் ரவுத், பா.ஜ.க.வின் எந்த தலைவரையும் சந்தித்தாரா இல்லையா என்பது குறித்து என்னிடம் எந்த தகவலும் இல்லை. சஞ்சய் ரவுத் காலையில் ஒன்று பேசுகிறார், இரவில் வேறு ஏதாவது பேசுகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார். மகாராஷ்டிராவில் நேற்று முதல் அம்மாநில சட்டப்பேரவையின் மழைக்காலத் கூட்டத்தொடர் தொடங்கியது.