தமிழகம், புதுச்சேரியில் ஒரே நேரத்தில் தேர்தலா? – உமேஷ் சின்ஹா பேட்டி

 

தமிழகம், புதுச்சேரியில் ஒரே நேரத்தில் தேர்தலா? – உமேஷ் சின்ஹா பேட்டி

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து கருத்தில் கொள்ளப்படும் என தேர்தல் ஆணைய செயலர் உமேஷ் சின்ஹா தெரிவித்தார்.

புதுச்சேரி சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழு, தலைமை தேர்தல் ஆணைய பொதுச்செயலாளர் உமேஷ் சின்ஹா தலைமையிலான குழுவினர் புதுச்சேரி சென்றனர். தொடர்ந்து அரசியல் கட்சி பிரமுகர்கள், தலைமைச் செயலாளர், காவல்துறை அதிகாரிகள், வருமானவரித்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

தமிழகம், புதுச்சேரியில் ஒரே நேரத்தில் தேர்தலா? – உமேஷ் சின்ஹா பேட்டி

ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் ஆணைய செயலர் உமேஷ் சின்ஹா, “கொரோனா காரணமாக பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க ஆலோசிக்கப்பட்டது. அரசியல் கட்சிகளிடம் மனு பெறப்பட்டது. வாக்காளர்கள் பலர் விடுப்பட்டுள்ளதாக அரசியல் கட்சிகள் கூறியுள்ளதால் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. விடுப்பட்டவர்கள் பெயர்களை சேர்க்கலாம். தகுதியுள்ள அனைவரும் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும். ஒரு வாக்குச்சாவடிக்கு 1000 வாக்காளர்கள் தான் வாக்களிக்க முடியும்.

பதற்றமான வாக்குச்சாவடிகள், ரவுடிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் கொடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பத்திரிக்கையாளர்களுக்கும் தபால் வாக்கு அளிக்க பரிசீலனை செய்யப்படும்” எனக் கூறினார்.