“பட்டிதொட்டி எங்கும் பள்ளிகள் தந்த கல்வி வள்ளல் காமராஜர்” – ஓபிஎஸ் ட்வீட்

 

“பட்டிதொட்டி எங்கும் பள்ளிகள் தந்த கல்வி வள்ளல் காமராஜர்” – ஓபிஎஸ் ட்வீட்

காமராஜரின் 45வது நினைவு தினத்தையொட்டி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ட்வீட் செய்துள்ளார்.

“பட்டிதொட்டி எங்கும் பள்ளிகள் தந்த கல்வி வள்ளல் காமராஜர்” – ஓபிஎஸ் ட்வீட்

இதுகுறித்து துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், “நேர்மை, எளிமையின் திருவுருவம் கல்விக்கண் திறந்த கர்மவீரர் பட்டிதொட்டி எங்கும் பள்ளிகள் தந்த கல்வி வள்ளல் வறியவர் வாழ்வில் ஒளியேற்றிய கலங்கரை விளக்கம் காமராசர் அவர்களின் நினைவுநாளில்
பெருந்தலைவர் அவர்களை போற்றி அவர் வழியில் ஏழைகளை வாழ்வில் உயர்த்துவோம்!” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக கர்மவீரர் காமராஜரின் நினைவுதினத்தையொட்டி முதல்வர் பழனிசாமி, தமிழகத்தை நாடே போற்றத்தக்க வகையில் உயர்த்திட்ட கல்வித்தந்தை பெருந்தலைவர் காமராசர் என்று புகழாரம் சூட்டியது குறிப்பிடத்தக்கது .