“பஸ்ஸின் பின் சீட்டில் வைத்து …”- கண்டக்டரின் காமப்பசிக்கு இரையான பெண்.

 

“பஸ்ஸின் பின் சீட்டில் வைத்து …”- கண்டக்டரின் காமப்பசிக்கு இரையான பெண்.

பேருந்தில் வந்த ஒரு பெண்ணை ஒரு கண்டக்டர் பலாத்காரம் செய்ததால் கைது செய்யப்பட்டார் .

“பஸ்ஸின் பின் சீட்டில் வைத்து …”- கண்டக்டரின் காமப்பசிக்கு இரையான பெண்.


கடந்த திங்களன்று டெல்லியில் இருந்து உத்தரபிரதேசத்திற்கு சென்ற ஒரு பஸ்ஸில், டெல்லியை சேர்ந்த ஒரு தாயும் அவரின் 14 வயதான மகள் மற்றும் ஒரு உறவுப்பெண் மூவரும் பயணம் செய்தனர் .அப்போது அந்த பஸ்ஸிலிருந்த கண்டக்டர் அந்த தாயோடு வந்த 14 வயதான பெண்ணை அடிக்கடி பார்த்து சைகை செய்தபடியே வந்தார் .ஆனால் அந்த பெண் அதை கண்டுகொள்ளாமல் வந்தார் .
பின்னர் அந்த பஸ் இரவு 11.30 மணியளவில் அங்குள்ள ஒரு மறைவான பகுதியில் பயணிகளுக்கு கழிப்பறை செல்ல நிறுத்தப்பட்டது .அப்போது அந்த பஸ்ஸிலிருந்த அனைத்து பயணிகளும் அந்த பஸ்ஸிலிருந்து இறங்கினர் .மேலும் அந்த 14 வயதான பெண்ணோடு வந்த தாய் மற்றும் ஒரு உறவுக்கார பெண் இருவரும் கழிப்பறைக்கு சென்று விட்டனர் .அப்போது பேருந்தில் அந்த 14 வயதான பெண் மட்டும் தனியாக இருப்பதை பார்த்த அந்த கண்டக்டர் அந்த பெண்ணின் வாயை பொத்தி அந்த பேருந்தின் சீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்து விட்டார் .அதன் பிறகு இந்த விஷயத்தை யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டினார் . பிறகு பாத்ரூம் போய்விட்டு வந்த அந்த பெண்ணின் தாய் வநதார் .அப்போது அந்த பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை அவரிடம் கூறினார் .அதை கேட்டு அதிர்ச்சியான அந்த தாய் அந்த கண்க்டரை தேடியபோது அவர் பஸ்சிலிருந்து ஓடி விட்டதை தெரிந்து கொண்டார் .அதன் பிறகு அந்த பெண்ணும் அவரின் தாயாரும் அங்குள்ள காவல் நிலையத்தில் அந்த கண்டக்டர் மீது புகார் கொடுத்தனர்