“ஏண்டா இது என்ன உங்கப்பன் வீட்டு ரோடா”-பைக் ரேஸ் வாலிபர்களை தட்டிக்கேட்டார் -நடுரோட்டிலேயே கொல்லப்பட்டார்..

 

“ஏண்டா இது என்ன உங்கப்பன் வீட்டு ரோடா”-பைக் ரேஸ் வாலிபர்களை தட்டிக்கேட்டார் -நடுரோட்டிலேயே கொல்லப்பட்டார்..

டெல்லியில் நடுரோட்டிலேயே பைக் ரேஸில் ஈடுபட்ட வாலிபர்களை தட்டிக்கேட்ட நபர் ,நடுரோட்டிலேயே தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் .

“ஏண்டா இது என்ன உங்கப்பன் வீட்டு ரோடா”-பைக் ரேஸ் வாலிபர்களை தட்டிக்கேட்டார் -நடுரோட்டிலேயே கொல்லப்பட்டார்..புதுடெல்லியில் ரகுபீர் நகரில் மூன்று வாலிபர்கள் அடிக்கடி அந்த பகுதியில் பைக்கில் ஸ்டண்ட் செய்வது வழக்கம் .இதனால் அந்த பகுதியில் வசிக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அந்த மூன்று வாலிபர்கள் பைக்கில் வரும்போது பார்த்ததும் அலறியடித்துக்கொண்டு ஓடுவார்கள் .இதனால் அனைவரும் அந்த வாலிபர்கள் மீது கடும்கோபத்துடன் இருந்தனர் .அப்போது அந்த பகுதியை சேர்ந்த மனீஷ் ஜுகி என்ற 25 வயது வாலிபர் ஒரு நாள் அந்த மூன்று வாலிபர்களின் பைக்கையும் நிறுத்தி அவர்களை “ஏன் இப்படி குழந்தைகளும் ,பெரியவர்களும் போகும் சாலையில் பைக்கில் வேகமாக போகிறீர்கள்?”என்று தட்டி கேட்டார் .

“ஏண்டா இது என்ன உங்கப்பன் வீட்டு ரோடா”-பைக் ரேஸ் வாலிபர்களை தட்டிக்கேட்டார் -நடுரோட்டிலேயே கொல்லப்பட்டார்..அப்போது அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் முற்றியது.இதனால் கோபமுற்ற அந்த வாலிபர்கள் மனீஷ் ஜுகியை கடுமையாக தாக்கினார்கள் .இந்த தாக்குதலில் கடுமையாக காயமுற்ற மனீஷ் ஜுகி அந்த இடத்திலேயே இறந்தார் .இந்த காட்சி அங்குள்ள சிசிடிவி காமெராவில் தெளிவாக பதிந்தது .
இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் மனீஷ் ஜுகியை அவர்கள் மூவரும் சேர்ந்து தாக்கும்போது சாலையில் போவோர் ஒருவர் கூட வந்து அதை தடுக்கவில்லை ,அனைவரும் வேடிக்கை பார்த்தபடியே செல்வது காமெராவில் தெளிவாக பதிந்துள்ளது .இதைபார்த்தபோது மனிதநேயம் என்பது மக்களிடையே குறைந்துவருவது தெரிகிறது .இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள் .