டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் உடல்நிலையில் முன்னேற்றம்

 

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் உடல்நிலையில் முன்னேற்றம்

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு கடந்த புதன்கிழமை உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டதுடன் மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததன் காரணமாக ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  இதையடுத்து அவருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் சத்யேந்திர ஜெயினுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் உடல்நிலையில் முன்னேற்றம்

இந்நிலையில், அவருக்கு ஏற்பட்டுள்ள நுரையீரல் தொற்று தீவிரமடைந்ததால் தொடர்ந்துஆக்சிஜன் ஆதரவில் சத்யேந்தர் ஜெயின் மூச்சு விட்டுக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் டெல்லி சுகாதார துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே பிளாஸ்மா சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர். பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து, சத்யேந்திர ஜெயினின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ள டெல்லி சுகாதார துறை, காய்ச்சல் குறைந்துள்ளதாகவும் உடலில் ஆக்ஸிஜன் அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளது.