லடாக் செல்கிறார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

 

லடாக் செல்கிறார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

இந்திய எல்லையான லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன படைவீரர்களின் இடையே திடீர் தாக்குதல் ஏற்பட்டது. அந்த மோதலில் இந்திய மற்றும் சீன ராணுவத்தில் பலர் படுகாயம் அடைந்த நிலையில், இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்து விட்டதாகவும் 4 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த மோதலால் எல்லையில் பதற்றமான சூழல் அதிகரித்தைத்தொடர்ந்து, இரு நாட்டுப் படைகளும் தங்களது படைகளை விலக்கிக் கொண்டது. இந்த தாக்குதலில் சீன ராணுவ வீரர்கள் 35 பேர் உயிரிழந்து விட்டதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்தது.

லடாக் செல்கிறார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

இந்த திடீர் தாக்குதலால் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. இதன் எதிரொலியாக டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதையடுத்து  மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் லடாக் செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, அவரது பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து பதற்றம் நிலவும் லடாக் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி கடந்த 3 ஆம் தேதி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

லடாக் செல்கிறார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

இந்நிலையில் மோடியை தொடர்ந்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜூலை 17ஆம் தேதி லடாக் செல்கிறார். 2 நாள் பயணமாக செல்லும் அவருடன் இந்திய ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நாரவனே உடன் செல்கிறார்.