“ஆன்லைன் விளையாட்டால் ஆபத்து” -சிறுமிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை..

 

“ஆன்லைன் விளையாட்டால் ஆபத்து” -சிறுமிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை..

ஒரு சிறுவனும் ,சிறுமியும் ஆன் லைன் விளையாட்டு விளையாடிய போது தொடர்ந்து அந்த சிறுமியிடம் தோற்றதால் கோபப்பட்ட சிறுவன், அந்த சிறுமியை அடித்து கொலை செய்துள்ள சம்பவத்தால் ஆன் லைனில் விளையாடும் பிள்ளைகளை பெற்றவர்களை பதற வைத்துள்ளது .

“ஆன்லைன் விளையாட்டால் ஆபத்து” -சிறுமிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை..

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் ஒரு 11 வயது சிறுவனும் ,9 வயது சிறுமியும் இந்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட ஐந்து மாதங்களாக தொடர்ந்து ஆன்லைனில் கேம் விளையாடி வந்தனர் .அந்த விளையாட்டில் தொடர்ந்து அந்த சிறுமி அந்த 11 வயது சிறுவனை தோற்கத்துக்கொண்டே வந்துள்ளார் .ஆனால் அந்த சிறுவனால் அந்த சிறுமியை ஒரு தடவை கூட வெற்றிபெறமுடியவில்லை .இதனால கடும் கோபமுற்ற அந்த சிறுவன் அந்த சிறுமியை ஒரு வயல் வெளிக்கு கடந்த திங்கள் கிழமையன்று கூட்டி சென்றான் .பிறகு அங்கிருந்த ஒரு பெரிய கல்லை எடுத்து அந்த சிறுமியின் தலையில் போட்டு அவரை கொலை செய்து விட்டு ,பயந்து போய் ஒரு பாத்ரூமுக்குள் சென்று கதவை தாழ் போட்டுக்கொண்டான் .
இதனால் மதியம் வரையில் தங்களின் மகளை காணாத அவரின் பெற்றோர் பதட்டமடைந்து தேடிய போது, சிறுமி இந்த வயல் வெளிப்பக்கம் சிறுவனோடு போனதை பார்த்ததாக சிலர் கூறியதும் ,அங்கு சென்று தேடிய போது அங்கு அவர்களின் மகள் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்ச்சியடைந்தனர் .பிறகு அவரின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தார்கள் .போலீசார் தீவிர விசாரணை நடத்தி சிறுமியை கொன்ற சிறுவனை கைது செய்தனர்.

“ஆன்லைன் விளையாட்டால் ஆபத்து” -சிறுமிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை..