நபிகள் நாயகம் குறித்து அவதூறு பேச்சு… பாஜக நிர்வாகியை கண்டித்து இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்…

 

நபிகள் நாயகம் குறித்து அவதூறு பேச்சு… பாஜக நிர்வாகியை கண்டித்து இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்…

திருப்பத்தூர்

நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய பாஜக நிர்வாகியை கண்டித்து, வாணியம்பாடியில் நள்ளிரவில் 100-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடந்த பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அந்த கட்சியின் நிர்வாகி கல்யாணராமன், நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நபிகள் நாயகம் குறித்த கல்யாணராமனின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நேற்று நள்ளிரவில் திரண்ட 100-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நபிகள் நாயகம் குறித்து அவதூறு பேச்சு… பாஜக நிர்வாகியை கண்டித்து இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்…

அப்போது, கல்யாணராமன் மீது கைது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பாஜகவுக்கு எதிராகவும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதனால் வாணியம்பாடி பேருந்து நிலையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டம் குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி நகர போலீசார், விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து, அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனர்.