சாக்குப்பையில் கட்டி ரயில் தடத்தில் வீசப்பட்ட ஏழு வயது சிறுமியின் உடல் !

 

சாக்குப்பையில் கட்டி ரயில் தடத்தில் வீசப்பட்ட ஏழு வயது சிறுமியின் உடல் !

மும்பையில் ரயில் தடத்தில் ஏழு வயது சிறுமியின் உடல் வீசப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தச் சிறுமியின் உடல் ஒரு சாக்குப்பைக்குள் வைத்து கட்டப்பட்டு மும்பை மஸ்ஜித் ரயில் நிலையத்தின் தண்டவாளத்தில் வீசப்பட்டுள்ளது. சிறுமியின் சிதைந்த உடல் கடந்த சனிக்கிழமை மீட்கப்பட்டது.

விளையாடுவதற்காக வீட்டிலிருந்து வெளியே சென்ற சிறுமி காணாமல் போயுள்ளார். இரண்டு வாரங்களாக சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.

அப்பகுதியின் சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்த போது, ஒரு இளைஞன் முதுகில் சாக்குப்பையுடன் நடந்து செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நபர் இறந்த சிறுமியின் வீட்டிற்கு அருகில் பணிபுரியும் ஒருவர் தான் என போலீஸ் கண்டுபிடித்தனர். அந்த நபர் அப்பகுதியில் கேட்டரிங் தொழில் செய்து வந்துள்ளான்.

சாக்குப்பையில் கட்டி ரயில் தடத்தில் வீசப்பட்ட ஏழு வயது சிறுமியின் உடல் !

அந்த நபரை விசாரித்த போது ​​அவர் உத்தரபிரதேசத்தில் உள்ள தனது வீட்டிற்கு தப்பிச் சென்றதாகக் கூறியுள்ளார். பின்னர் போலீசார் குற்றம் சாட்டப்பட்டவரின் உறவினர்களைத் தொடர்பு கொண்டு மும்பைக்கு வரச் சொன்னார்கள்.

குற்றம் சாட்டப்பட்ட அந்த நபர் மும்பை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். விசாரணைக்குப் பிறகு தான்தான் சிறுமியைக் கொலை செய்து சாக்குப்பையில் கட்டி ரயில் தண்டவாளத்தில் வீசியதை ஒப்புக்கொண்டார். அதன் பின்னர் போலீஸ் சிறுமியின் உடலை மீட்டுள்ளனர்.

ஆய்வாளர் சந்தீப் பகிதர், “சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானாரா என்பது எங்களுக்கு பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த தெரியவரும்” என்று கூறினார். குற்றம் சாட்டப்பட்டவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.