“ஊரார்க்கு ஒன்று என்றால் ஓடி நிற்கும் மா.சு.வுக்கு இப்படியொரு சோதனையா?” – மு.க.ஸ்டாலின் வேதனை !

 

“ஊரார்க்கு ஒன்று என்றால் ஓடி நிற்கும் மா.சு.வுக்கு இப்படியொரு சோதனையா?”     – மு.க.ஸ்டாலின் வேதனை !

திமுக எம்எல்ஏ மா.சுப்ரமணியத்தின் மகன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

“ஊரார்க்கு ஒன்று என்றால் ஓடி நிற்கும் மா.சு.வுக்கு இப்படியொரு சோதனையா?”     – மு.க.ஸ்டாலின் வேதனை !

திமுக எம்எல்ஏ மா.சுப்ரமணியத்தின் இளைய மகன் அன்பழகன் (34) காலமானார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அன்பழகன் சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு குணமாகி வீடு திரும்பினார். இருப்பினும் இன்று ஏற்பட்ட திடீர் மூச்சு திணறல் காரணமாக அன்பழகன் உயிரிழந்தார்.

இந்நிலையில் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், அருமைச் சகோதரர் மா.சுப்ரமணியத்தின் மகன் அன்பழகன் கொரோனா தொற்றால் உயிரிழந்தது நெஞ்சை உறைய வைத்துவிட்டது. மா.சு இணையர் கண்ணின் மணி போல் காத்துவந்தார்கள். ஆறுதல் சொல்ல வார்த்தையில்லை. ஊரார்க்கு ஒன்று என்றால் ஓடி நிற்கும் மா.சு.வுக்கு இப்படியொரு சோதனையா?
ஆழ்ந்த இரங்கல்கள்!” என்று பதிவிட்டுள்ளார்.