கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம்.. சென்னையில் தொடரும் உயிரிழப்புகள்!

 

கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம்.. சென்னையில் தொடரும் உயிரிழப்புகள்!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் சென்னையில் மட்டுமே 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது சென்னையில் தான் அதிக அளவில் உயிரிழப்பு ஏற்படுகிறது. இவ்வாறு கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் சென்னையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்துள்ளார்.

கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம்.. சென்னையில் தொடரும் உயிரிழப்புகள்!

திருவல்லிக்கேணியைச் சேர்ந்த 47 வயது மதிக்கத்தக்க பெண், கடந்த 23 ஆம் தேதி சென்னை ஓம்ந்தூரார் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றால் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அவர் உயிரிழந்திருக்கிறார். இதே போல கே.கே. நகர் இஎஸ்ஐ மருத்துவமனை கொரோனா சிகிச்சை பெற்று வந்த 47 வயது பெண்ணும், ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 65 வயது மூதாட்டியும் உயிரிழந்துள்ளனர்.