‘கால்வாயில் மிதந்த இரண்டு ஆண்களின் சடலங்கள்’ போலீசார் தீவிர விசாரணை!

 

‘கால்வாயில் மிதந்த இரண்டு ஆண்களின் சடலங்கள்’ போலீசார் தீவிர விசாரணை!

மேட்டூர் ஸ்டான்லி நீர்த்தேக்கத்தில் கிடந்த அடையாளம் தெரியாத சடலங்கள் பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் ஸ்டான்லி நீர்த்தேக்கத்தில் நீர் திறந்து விடப்படும் பகுதியில் கால்வாய் ஒன்று இருக்கிறது. இன்று காலை அந்த வழியே சென்ற பொதுமக்கள், அங்கு இரண்டு சடலங்கள் மிதந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து சென்ற போலீசார், அந்த சடலங்களை நீர் நிலையில் இருந்து மீட்டனர். இறந்தவர்கள் யாரும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் இல்லை என தெரியவந்ததையடுத்து, அங்கிருந்து சட்டையில் கிடந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினர்.

'கால்வாயில் மிதந்த இரண்டு ஆண்களின் சடலங்கள்' போலீசார் தீவிர விசாரணை!

அப்போது, அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் போலீசாரிடம் பேசியதால் இறந்தவர்களை பற்றிய எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை. இதனையடுத்து, சடலங்களை பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அந்த பகுதி ஆழமானது என்பதால் அதில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் உயிரிழந்தவர்கள் அங்கு குளிக்க முயன்று நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்றும் தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உயிரிழந்தவர்களின் உறவினர்களை தொடர்பு கொள்ள முயன்று வருகின்றனர்.