ஒரே ஒரு வார்த்தைதான்… உடைந்தது காதல்’ பிக்பாஸ் வீட்டில் 43-ம் நாள்

 

ஒரே ஒரு வார்த்தைதான்… உடைந்தது காதல்’ பிக்பாஸ் வீட்டில் 43-ம் நாள்

பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் உறவுகளுக்குள் எப்போதுமே ஒரு பதற்றமும், உறுதியற்ற தன்மையும் காணப்படும். சென்ற சீசன்களில் ஓவியா – ஆரவ், லாஸ்லியா – கவின் போன்ற காதல் உறவுகளானாலும் சரி, சேரம் – லாஸ்லியா எனும் அப்பா – மகள் உறவானாலும் சரி. எந்த நேரமும் விட்டுச்செல்லும் ரயில் பயண உறவுகளே… அப்படியான ஓர் உறவு முறிவு காட்சி அரங்கேறிய எப்பிசோட் நேற்றையது.

ஒரே ஒரு வார்த்தைதான்… உடைந்தது காதல்’ பிக்பாஸ் வீட்டில் 43-ம் நாள்

முந்தைய நாள் காட்சிகளின் தொடர்ச்சியிலிருந்து ஆரம்பமானது நேற்றைய எப்பிசோட். அனிதா ரொம்ப சோகமாக இருந்தார். அவரிடம் சென்று சோம்ஸ் மன்னிப்புக் கேட்டுக்கொண்டிருந்தார். அனிதா தன்னை நாமினேஷன் செய்திருக்கக்கூடும் என்று சொல்லியதால். ‘நீ எவிக்‌ஷனிலிருந்து தப்பிச்சப்ப, எப்படி சந்தோஷமா, கொண்டாடினேன்… நானே எப்படி நாமினேட் பண்ணியிருப்பேன்’னு அணத்திட்டு இருந்தார் அனிதா. தனது ஆயிரத்தி எட்டாவது ஸாரியை உதிர்த்தார் சோம்ஸ். இன்னும் ரியோ வந்து ஸாரி கேட்கலையேன்னு அனிதாவின் எதிர்பார்ப்பு. ரியோவும் தான் ஸாரி கேட்டதாக ரமேஷிடம் சொல்லிட்டு இருந்தார்.

சோம் மன்னிப்பு கேட்டதை கடுப்போடு விவாதித்தது அர்ச்சனா அண்ட் குரூப். சோம்ஸை அனிதா நட்பிலிருந்து பிரித்து தனது டீம்க்கு முழுமையாகக் கொண்டு வந்திருந்தார். ஆனால், பழைய நட்பில் சோம்ஸ் பேசியதில் காண்டான அர்ச்சனா, சோம்ஸை வறுத்தெடுத்தார். கடுப்பான சோம்ஸ், ஆவேசமாக எழுந்து வேகமாக போய் பெட்டில் படுத்துக்கொண்டார். ஆனாலும் சிறிது நேரத்தில் ராசியாகி விட்டார்கள் அர்ச்சனா – சோம்ஸ்.

43-ம் நாள்

ஒரே ஒரு வார்த்தைதான்… உடைந்தது காதல்’ பிக்பாஸ் வீட்டில் 43-ம் நாள்

’ஹார்ட்டுக்குள்ள பச்ச குத்தியே’ என பிரபுதேவாவின் அசத்தலான டான்ஸ் பாட்டு ஒலிக்க, கேபி, ஷிவானி, ரம்யா என வழக்கமான குரூப் மட்டும் உற்சாகமாக ஆடின. அனிதா சோகத்தின் வடிவமாக முதன்நாளை தொடர்ந்தார். ஷனம், சுசித்ரா சமதானப்படுத்த முயல, ‘ரியோ எங்கிட்ட வந்து பேசலயே… அது எனக்கு இன்சல்ட்தானே’என வித்தியாசமாக அணத்தினார். உண்மையில் அனிதாவிடம் பேச ரியோபயப்படுகிறார் என்பதே உண்மை. ஏனெனில், அரை மணிநேரம் தானே பேசிவிட்டு, ரியோ பேச ஆரம்பித்த பத்து நொடிகளில் குறுக்கிட்டு, ‘அட்வைஸ் பண்ணாதீங்க’னு முறைச்சிட்டு போய்விடும் அனிதாவின் வழக்கத்தைப் பார்த்து ரியோ பயந்தே இருந்தார். அர்ச்சனா ஊக்குவிப்பால் ஒதுங்கியே கிடந்தார்.

லுங்கி கட்டும் முறைகள் பற்றிய மார்னிங் டாஸ்கில் கிளாஸ் ஜித்தன் ரமேஷ் கிளாஸ் எடுக்க, சாவு குத்து முதல் சாமி கும்பிடுவது வரை விதவிதமாகப் பேசப்பட்டன.

ஒரே ஒரு வார்த்தைதான்… உடைந்தது காதல்’ பிக்பாஸ் வீட்டில் 43-ம் நாள்

ரியோவே வந்து பேசுவார் என காத்திருந்து, வெறுத்த அனிதா ’ஐந்து நிமிடம் டைம் தாரீங்களா?’ என ரியோவிடம் கேட்க, ‘அப்பால பார்க்கலாம்’என பிகு பண்ணினார். வெளியிலிருந்து சண்டை போட பார்க்கிறதுக்கு ஜாலியாக இருக்கு என அனிதாவிடம் பாலா சொல்ல, அனிதாவும் பதிலுக்கு நானும்தேன் என்றார். கிச்சனில் சுசிக்கும் பாலாவுக்கும் சின்ன மோதல். உடனே ராசியாகிவிட்டார்கள்.

இன்னொரு பக்கம், சம்யுக்தாவும் ஷிவானியும் நாமினேஷனில் யாரை வீழ்த்தலாம் என திட்டம் தீட்டிக்கொண்டிருந்தார்கள்.

ஒருவழியாக, எவிக்‌ஷன் நாமினேஷன் சடங்கு தொடங்கியது. ‘காதல் கண்ணை மறைக்குது’ என பாலாவைச் சொல்லி ஆரி நாமினேட் பண்ணினார். உதாரணமாக, கமல் விசாரணையில் ஷிவானியின் பெயரைச் சொல்ல தவிர்த்ததைக் குறிப்பிட்டார். நல்ல அவதானிப்புதான் இது. இது கன்ஃபெக்‌ஷன் ரூமில்தான் சொல்றேனு ஆரி சொன்னதை, பிக்பாஸ் போட்டுக்கொடுப்பார் என ஆரி நினைத்திருக்க மாட்டார். அர்ச்சனா குரூப் ஒட்டுமொத்தமாக அனிதாவை குறி வைத்து நாமினேட் செய்தது.

ஒரே ஒரு வார்த்தைதான்… உடைந்தது காதல்’ பிக்பாஸ் வீட்டில் 43-ம் நாள்

இறுதியாக, சுசித்ரா, அனிதா, ரியோ, சோம்ஸ், பாலா, சம்யுக்தா, ஆரி என முடிவானது. காதல் கண்ணை மறைக்குது என்பது தன்னையும் ஷிவானியையுதான் என பாலா இப்படிச் சொன்னால் கேட்டுடுவேன் எனச் சொன்னது ரியோவுக்கு காதறுப்பேன் என புரிந்ததுபோல. அதனால் சூடானார்.

ஷிவானியும் பாலாவும் பேசிட்டு இருந்தப்ப, ரியோ கடுப்பாகி கதவை கோபத்தோடு உதைத்தார். இதை இரு தரப்பிலும் இருவருவரும் காரசாரமாகப் பேசினார். ஆனால், இந்தக் காட்சிகள் எல்லாம் பாலாவுக்குள் பதற்றத்தை விதைத்தது. கூல்லாக இருக்கிறேன் எனக் காட்டிக்கொண்டாலும் பதற ஆரம்பித்துவிட்டார். ஆனால், நிஜமாகவே கூல்லாக இருந்தது ஷிவானிதான். அவர் ஏதோ ஒரு முடிவில் இருக்கிறார் போல. ஆனால், முன்கூடியே ‘காதல் கனவே நீ போகாதே போகாதே’ என்றும் பாடியது இன்னும் ஆச்சர்யம்.

ஒரே ஒரு வார்த்தைதான்… உடைந்தது காதல்’ பிக்பாஸ் வீட்டில் 43-ம் நாள்

புது கேப்டன் ஆஜித் இருதரப்பிலும் கருத்து கேட்டு பஞ்சாயத்து செய்ய முயன்றார். ‘காதல் கண்ணை மறைக்குது’ என்னைத்தான் என நினைத்தேன். நான் காதலிக்கிறேனா என்பதை நான் தான் சொல்லணும்’ என பாலா அழுத்தமாகச் சொல்ல சுசியும் ஊக்குவித்தார். ஓகே என்றதும் உள்ளே சென்ற ஆஜித்திடம் ‘காதை கிழிச்சிடுவேனு எப்படிச் சொல்லலாம்னு ரியோ கேட்க, அந்த வார்த்தை எனக்குத் தெரியாது என ஆஜித் பின்வாங்கினார். எத்தனை முறைதான் ஒதுங்கி போவது என ரியோ சூடானார். பிக்பாஸ் பற்ற வைத்த நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்ததைப் பார்த்து மகிழ்ந்து சிரித்திருப்பார்.

’உன் மீது லவ் வந்தா சொல்றேன்.. ஆனா, வராது’ என ஒரு டிஸ்க்லைமர் போட்டார் பாலா. ஓஹோ என்பதாக ‘ஓகே’என்று நிதானமாக அதை எதிர்கொண்டார். ஷிவானியின் நிதானம் நிஜமாகவே ஆச்சர்யமா இருக்கிறது. ரியோதான் காதல் கண்ணை மறைக்குது என சொன்னது ரியோதான் என்று சுசித்ரா ஊக்குவித்தார்.

ஒரே ஒரு வார்த்தைதான்… உடைந்தது காதல்’ பிக்பாஸ் வீட்டில் 43-ம் நாள்

சில நிமிடங்கள் கழித்து, பாலாவும் ஷிவானியும் தனியாகப் பேசிக்கொண்டிருக்க உள்ளே புகுந்தார் சுசித்ரா. சிடுமூஞ்சி மேக்ஸ் எனும் வார்த்தையை வைத்து பாட்டை உருவாக்க பாலாவும் சுசித்ராவும் ஈடுபட ஷிவானி கடுப்பாகி வெளியேறினார். இப்போது தடுத்தால் காதல் பஞ்சாயத்தில் வலுவாகி விடும் என பாலா விட்டுவிட்டார். பேசவே மாட்டேன்னு சொன்ன ஷனம் பாலா குரூப்பில் இணைந்து பாடி, ஆடியதும் அவரை ஏற்றுக்கொண்டது இன்னொரு ஆச்சர்யம்.

ஒரே ஒரு வார்த்தைதான்… உடைந்தது காதல்’ பிக்பாஸ் வீட்டில் 43-ம் நாள்

’என்னை கண்டுக்கலன்னு வருத்தமெல்லாம் இல்ல’னு வருத்தப்பட்டு சொல்லிட்டு இருந்தார் ஷிவானி. இல்ல… நான் சும்மாதான் பாட்டு பாடலாம்னு ப்ளான் பண்ணினோம் என பாலா, சொன்னதும், ‘நீ பாடினது தப்புன்னு சொல்லல..’ என ஷிவானியின் வார்த்தைகள் எல்லாமே குத்தலாக இருக்க, இறுதியாக ‘நான் உங்களைத் தொந்தரவு பண்ணல’என்றதும், ’சரி பண்ணாத’ என்று சொல்லி விலகி நடந்த பாலா, திரும்ப வந்தார். ஏதோ பேசுவார் என ஷிவானியிடம் ஏதும் பேசாமல் வேறு பக்கம் நடந்தார். இந்த நட்பான அன்பானா உறவிலிருந்து பாலாவிடமிருந்து ஒரு விலகல் ஏற்பட்டு விட்டது என்பது மட்டும் உண்மை. ஆரியின் ஒத்த வார்த்தை இந்த ஸ்டேஜ்க்கு கொண்டு வந்துடுச்சு.

ஒரே ஒரு வார்த்தைதான்… உடைந்தது காதல்’ பிக்பாஸ் வீட்டில் 43-ம் நாள்

’நான் அந்த வார்த்தையைச் சொல்ல’ ‘ஓ… அப்ப என் பக்கம்தான் தப்பு… சாரி’ என ரியோவும் பாலாவும் நேரடியாக உட்கார்ந்து சமாதானம் ஆனார்கள். அனிதாவை கன்ஃபெக்‌ஷன் ரூம்க்கு கூப்பிட்டதும் அப்படி உற்சாகமாகி ஆடியது சற்று அச்சத்தையே கொடுத்தார்கள். இரவு ஒரு டாஸ்க் கொடுத்து கிச்சு கிச்சு மூட்டினார் பிக்பாஸ்.

இறுதியாக, ’வெல்கம் டூ சிங்கிள் கேர்ஸ்’ என சம்யுக்தாவால் அழைக்கப்பட்டவர் ஷிவானி. ரம்யா, ஷிவானி, சம்யுக்தாவின் சிங்கிள் கேர்ள்ஸ் டான்ஸ் ஆட எப்பிசோட்டை முடித்தார் பிக்கி.

பிக்பாஸ் பற்றிய அப்டேட்மற்றும் கட்டுரைகளைப் படிக்க இங்கே கிளிக் செய்க.