திடீர் உடல்நிலை பாதிப்பு… வயதான அம்மாவை கவனிக்க முடியவில்லை… மகள், பேரன், பேத்தி கூட்டு சேர்ந்து செய்த அதிர்ச்சி காரியம்

 

திடீர் உடல்நிலை பாதிப்பு… வயதான அம்மாவை கவனிக்க முடியவில்லை… மகள், பேரன், பேத்தி கூட்டு சேர்ந்து செய்த அதிர்ச்சி காரியம்

பெற்ற வயதான அம்மாவை கவனிக்க முடியாமல் அவரது மகள், பேரன், பேத்தி சேர்ந்து அவரை எரித்துக் கொன்றுள்ளனர். இந்த கொடூர சம்பவம் திருமங்கலத்தில் நடந்துள்ளது.

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே பசும்பொன் நகரைச் சேர்ந்த மூதாட்டி கருப்பாயி (75). இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் கருப்பாயி தனது மகள் பழனியம்மாளின் வீட்டில் வசித்து வந்தார். இதனிடையே, பழனியாம்மாளின் கணவர் திடீரென உயிரிழந்தார். இதனால் பேரன் காளிதாஸ், பேத்தி காளீஸ்வரி, இளைய மருமகன் வசந்தகுமார் ஆகியோர் கருப்பாயியை கவனித்து வந்தனர்.

இந்த நிலையில் கருப்பாயின் உடல் நிலை திடீரென பாதிக்கப்பட்டது. படுக்கையில் அப்படியே கிடந்த அவரின் உடலில் துர்நாற்றம் ஏற்படுவதாக கூறி வீட்டை காலி செய்ய அதன் உரிமையாளர் வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து, வாடகைக்கு பேரன் வீடு பார்த்துள்ளார். ஆனால், வாடகைக்கு வீடு கிடைக்கவில்லை. இதனால் என்ன செய்வதென்று யோசித்த குடும்பத்தினர், கருப்பாயியை கழுத்தை நெரித்து கொலை செய்தனர். தடயத்தை அழிக்க அவரது உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த திருமங்கலம் காவல்துறையினர், பழனியம்மாள், காளீஸ்வரி, காளிதாஸ் மற்றும் வசந்தகுமார் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அப்போது, தாய் கருப்பாயியை கவனித்துக்கொள்ள முடியவில்லை. இதனால் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்தோம் என்று பழனியம்மாள் வாக்குமூலம் அளித்துள்ளார். பெற்ற தாயாரை கவனிக்க முடியாமல் அவரை மகளே எரித்து கொன்ற சம்பவம் திருமங்கலம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.