மது ஊற்றிக்கொடுத்த மகள் -மயங்கிய தந்தை -அடுத்து நடந்த கொடூரம் .

 

மது ஊற்றிக்கொடுத்த மகள் -மயங்கிய தந்தை -அடுத்து நடந்த கொடூரம் .

சொத்து கொடுக்காத தந்தையை அவரின் மகள் காதலனுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிச்சியடைய செயுதுள்ளது.

மது ஊற்றிக்கொடுத்த மகள் -மயங்கிய தந்தை -அடுத்து நடந்த கொடூரம் .


உத்தரபிரதேசத்தின் பரேலியில் வசிக்கும் 46 வயதான விவசாயி ஹர்பால் சிங்குக்கு 10 ஏக்கர் நிலம் இருந்தது .அவர் அந்த பகுதியில் பெரிய விவசாயி ஆவார் .அவருக்கு ப்ரீத்தி என்று ஒரு மகளிருந்தார் .அந்த மகள் அதே பகுதியில் வசிக்கும் தர்மேந்திர யாதவ் என்ற வாலிபரை காதலித்து வந்தார் .அந்த மகள் அவரின் தந்தையிடம் சென்று தான் தன்னுடைய காதலனை திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் ,அதனால் அவரின் 10 ஏக்கர் நிலத்தை தன் பெயரில் மாற்றி தரும்படி கேட்டார் .ஆனால் அதற்கு அந்த தந்தை மறுத்துள்ளார்

இதனால் கோபமடைந்த ப்ரீத்தி மற்றும் அவரது காதலன் தர்மேந்திர யாதவ் இருவரும் சேர்ந்து அந்த தந்தை ஹர்பல் சிங்கை கொல்ல முடிவுசெய்தனர் .அதனால் கடந்த வாரம் அவரை கூப்பிட்டு அவரின் மகள் சமாதானமாக போவது போல் நடித்து மது ஊற்றி கொடுத்தார் .பின்னர் அளவுக்கதிகமாக மது அருந்திய அவர் மயங்கி விழுந்தார் .அதன் பிறகு அந்த பெண் அவரின் காதலனுக்கு போன் செய்து வரவைத்தார் .பிறகு இருவரையும் சேர்ந்து அவரை கொன்று ,அவரின் உடலை அங்கிருந்த ஒரு மரத்தில் தற்கொலை போல செட்டப் செய்து தொங்க விட்டனர் .
மறுநாள் அவரின் மனைவி போலீசில் புகார் கொடுத்தார் .போலீசார் அவரின் உடலை பிரேத பரிசோதனை செய்த போது அவரை கொலை செய்ததை கண்டுபிடித்து அவரின் மகள் மற்றும் காதலன் தர்மேந்திர யாதவ்
இருவரையும் கைது செய்தனர்