“வாலிபரால் கெடுக்கப்பட்டேன் -அவர் குடும்பத்தாரால் கொடுமைப்படுத்தப்பட்டேன் “-தலித் பெண் தற்கொலை ..

 

“வாலிபரால் கெடுக்கப்பட்டேன் -அவர் குடும்பத்தாரால் கொடுமைப்படுத்தப்பட்டேன் “-தலித் பெண் தற்கொலை ..

தலித் பெண்ணை கல்யாணம் செய்வதாக ஏமாற்றி, கெடுத்த வாலிபரின் குடும்பத்தினர் செய்த கொடுமையால் அந்த தலித் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் , லக்கிம்பூர் கெரியில் 19 வயது தலித் பெண்ணை அதே ஊரை சேர்ந்த 28 வயது வாலிபர் திருமணம் செய்வதாக ஏமாற்றி அவரை கர்ப்பமாக்கியுள்ளார் .இதனால் ஜூன் மாதம் அவர் மீது அந்த பெண் போலீசில் புகாரளித்துள்ளார் .அதனடிப்படையில் வழக்கு பதிந்த போலீசார் ,அந்த வாலிபரை கைது செய்து சிறையிலடைத்துள்ளனர் .

“வாலிபரால் கெடுக்கப்பட்டேன் -அவர் குடும்பத்தாரால் கொடுமைப்படுத்தப்பட்டேன் “-தலித் பெண் தற்கொலை ..
இந்நிலையில் அந்த வாலிபரின் பெற்றோர்களும் ,அவரின் மூன்று சகோதரர்களும் அந்த பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர் .இதனால் மனமுடைந்த அந்த பெண் ஜூலை 7ம் தேதியன்று ஒரு தற்கொலை குறிப்பினை எழுதிவைத்துவிட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .

“வாலிபரால் கெடுக்கப்பட்டேன் -அவர் குடும்பத்தாரால் கொடுமைப்படுத்தப்பட்டேன் “-தலித் பெண் தற்கொலை ..இது பற்றி தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து ,அந்த பெண்ணின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு ,அங்கிருந்த தற்கொலை குறிப்பினை கைப்பற்றினர் .அதில் தன்னை கல்யாணம் செய்து கொள்வதாக ஏமாற்றி ,கருக்கலைப்பு செய்ய வைத்து ,இப்போது சிறையிலிருக்கும் வாலிபர் மீதும், அவரின் குடும்பத்தினர் மீதும் குற்றம் சுமத்தியுள்ளார் .

“வாலிபரால் கெடுக்கப்பட்டேன் -அவர் குடும்பத்தாரால் கொடுமைப்படுத்தப்பட்டேன் “-தலித் பெண் தற்கொலை ..அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கு காரணம் தன்னை கெடுத்த வாலிபரின் பெற்றோர்களும் ,அவரின் சகோதரர்களும் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும் ,தன்னுடைய தற்கொலைக்கு அவர்கள்தான் காரணமென்றும் குற்றம் சுமத்தியிருந்தார் .அதனடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அனைவரையும் கைது செய்துள்ளனர் .