ஊத்தி கொடுப்பது டிடிவியின் குலத்தொழில் எனக்கூறியதற்கு வருத்தம் தெரிவித்தார் சி.வி.சண்முகம்!

 

ஊத்தி கொடுப்பது டிடிவியின் குலத்தொழில் எனக்கூறியதற்கு வருத்தம் தெரிவித்தார் சி.வி.சண்முகம்!

கடந்த சில தினங்களுக்கு முன் விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவி சண்முகம், “மது ஊத்திக் கொடுப்பது தான் டிடிவி தினகரனின் தொழில், ஊத்திக் கொடுத்து குடியைக் கெடுப்பவர் டிடிவி தினகரன், கூவத்தூரில் எங்களுக்கு டிடிவி தினகரன் ஊத்திக் கொடுத்தார்” என தெரிவித்திருந்தார். இதற்கு குறிப்பிட்ட சமுதாயத்தை அமைச்சர் சிவி சண்முகம் இழிவு படுத்தியதாக கண்டனங்கள் எழுந்தன.

ஊத்தி கொடுப்பது டிடிவியின் குலத்தொழில் எனக்கூறியதற்கு வருத்தம் தெரிவித்தார் சி.வி.சண்முகம்!

இந்நிலையில் இதற்கு வருத்தம் தெரிவித்துள்ள அமைச்சர் சிவி சண்முகம், நன் சொன்ன வார்த்தை தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. டிடிவி.தினகரனின் குடும்ப தொழில் என்ற அர்த்தத்தில் தான் ஊத்தி கொடுப்பது குலத் தொழில் என்று நான் சொன்னேன். அதை ஏதோ ஒரு சமுதாயத்திற்கு எதிராக நான் கருத்து சொன்னதாக பரவி வருகிறது. அப்படி நான் சொன்ன கருத்து யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார்.