இதற்குமேல் ச‌சிகலா ஐநா சபையில்தான் முறையிட வேண்டும்- சிவி சண்முகம்

 

இதற்குமேல் ச‌சிகலா ஐநா சபையில்தான் முறையிட வேண்டும்- சிவி சண்முகம்

பெங்களூருவிலுள்ள விக்டோரியா மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த சசிகலா கடந்த 31 ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவர் மருத்துவமனையிலிருந்து சென்றபோது ஜெயலலிதா பயன்படுத்திய காரில் பயணித்தார். அந்த காரில் அதிமுக கொடி பறக்கவிட்டு சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதிமுக கொடியை பயன்படுத்தியற்காக சசிகலா மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என அறிவித்தது. இதனிடையே தமிழக டிஜிபியிடம் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார், அதிமுக மூத்த நிர்வாகிகள் புகார் அளித்தனர். அதிமுக கொடியை பயன்படுத்திய சசிகலா மீது நடவடிக்கை எடுக்க கோரி டிஜிபியிடம் புகார் மனு அளித்தனர்.

இதற்குமேல் ச‌சிகலா ஐநா சபையில்தான் முறையிட வேண்டும்- சிவி சண்முகம்

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவி சண்முகம், “2017 நவம்பரில் ஓபிஎஸ் – ஈபிஎஸ் தலைமையிலான அதிமுகதான், உண்மையான அதிமுக என தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்தது. அதிமுகவுக்கும், தனக்கும் சம்பந்தமில்லை என நீதிமன்றத்தில் மனு செய்து விலகி கொண்டவர் டிடிவி தினகரன். ச‌சிகலா தாக்கல் செய்த மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்த‌து. இதற்குமேல் ச‌சிகலா ஐநா சபையில்தான் முறையிட வேண்டும்” எனக் கூறினார்.