ஏரியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு
Oct 22, 2020, 15:44 IST1603361662000
கடலூர்
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த காஞ்சிரங்குளம் கிராமத்தை சேர்ந்த சிறுமிகள் மேகலா (12) மற்றும் மனிஷா (13) ஆகியோர் நேற்று மாலை அங்குள்ள ஏரி பகுதிக்கு சென்று விளையாடி உள்ளனர். அப்போது, எதிர்பாராத
விதமாக சிறுமிகள் இருவரும் தண்ணீரில் தவறி விழுந்துள்ளனர். நீச்சல் தெரியாததால் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தகவலின் பேரில் சிறுமிகளின் உடலை மீட்ட சிறுபாக்கம் போலிசார், இதுகுறித்து வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.