கோயில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை – போலீசார் விசாரணை

 

கோயில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை – போலீசார் விசாரணை

கடலூர்

கடலூர் அருகே அம்மன் கோயில் உண்டியலை உடைத்து மர்மநபர்கள் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் புதுநகர் காவல்நிலையம் அருகே புதுப்பாளையம் ஆற்றங்கரை வீதியில் பழமையான தறைகாத்த காளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலை நேற்று இரவு

கோயில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை – போலீசார் விசாரணை

வழக்கம்போல் பூசாரி பூட்டுவிட்டு சென்றநிலையில், இன்று காலை கோயிலை திறக்கசென்றுள்ளார். அப்போது, பூட்டு உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

கோயில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை – போலீசார் விசாரணை

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் மர்மநபர்கள் கோயிலில் உள்ள மின்மாற்றியின் பீஸ்கேரியரை பிடுங்கிவிட்டு கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. கொள்ளை சம்பவம் குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.