கடலூர்: வீட்டின் கதவை உடைத்து 14 பவுன் நகை திருட்டு:எதிரே உள்ள வங்கியிலும் மர்ம நபர் கொள்ளை முயற்சி
செம்மண்டலம் அருகே வீட்டின் முன்பக்க கதவை உடைத்து 14 பவுன் நகை திருட்டில் ஈடுபட்டதோடு, எதிரே உள்ள தனியார் வங்கியிலும் மர்ம நபர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதையடுத்து போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கடலூர் செம்மண்டலம் அருகே உள்ள வரதராஜன் நகரில் வசிப்பவர் ரயில்வே ஊழியரான மகாராஜன். இவரது வீட்டில் அனைவரும் வெளியூர் சென்றிருந்த பொழுது நள்ளிரவில் புகுந்த கொள்ளையன் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 14 பவுன் நகைகளை திருடி உள்ளார். இதனை அடுத்து வீட்டை விட்டு வெளியேறிய கொள்ளையன் வீட்டின் எதிரே உள்ள தனியார் வங்கியின் கதவை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதுதொடர்பாக காலை பணிக்கு வந்த வங்கி ஊழியர்கள் வங்கியின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கடலூர் புதுநகர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி சோதனை செய்தனர். அதில் கொள்ளையன் வங்கியில் இருந்து வெளியேறி எதிரே உள்ள வீட்டிற்கும் சென்றது பதிவாகி இருந்தது.
இதனை அடுத்து அந்த வீட்டில் சென்று சோதனையிட்டதில் அங்கு 14 பவுன் நகை திருடு போயிருந்தது தெரியவந்தது. பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் கொள்ளை நடந்த இடத்தில் விசாரணை மேற்கொண்டார். மேலும் கடலூர் புதுநகர் காவல்துறையினர் கொள்ளை தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர்: வீட்டின் கதவை உடைத்து 14 பவுன் நகை திருட்டு:எதிரே உள்ள வங்கியிலும் மர்ம நபர் கொள்ளை முயற்சி!#Cuddalore #crime #TTN pic.twitter.com/EGcDjw5tlM
— Top Tamil News (@toptamilnews) September 14, 2020