கடலூர்- வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
Oct 17, 2020, 13:15 IST1602920707000
கடலூர்
கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு சோதனையில் கணக்கில் வராத 32 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
கடலூர் கேப்பர் மலையில் செயல்பட்டு வரும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று மாலை லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீரென சோதனையில் ஈடுப்பட்டனர். டி.எஸ்.பி மெல்வின்ராஜ் தலைமையில் சுமார் 4
மணிநேரம் நடைபெற்ற இந்த அதிரடி சோதனையில் கணக்கில் வராத 32 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து, லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.