நக்சலைட்டுகளால் கடத்தப்பட்ட ராணுவ வீரர் விடுவிப்பு!
Apr 9, 2021, 04:30 IST1617922800000
நக்சலைட்டுகளால் கடத்தப்பட்ட துணை ராணுவ படை வீரர் ராகேஷ்வர் சிங் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சத்தீஷ்கர் மாநிலம் பிஜப்பூரில் கடந்த சனிக்கிழமை நக்சலைட்டுகளுடன் நடந்த மோதலில் 22 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் வீர மரணமடைந்தனர். அதுமட்டுமின்றி, கோப்ரா கமாண்டோ படை வீரர் ராகேஸ்வர் சிங்கை நக்சலைட்டுகள் கடத்தி சென்றனர். அவரை விடுவிக்கக்கோரி குடும்பத்தினர் கண்ணீருடன் கோரிக்கை விடுவித்தனர்.
இந்நிலையில் ராகேஸ்வர் சிங்கை நக்சலைட்டுகள் விடுவித்தனர். இதனையடுத்து இவர் துணை ராணுவ படை வீரர்கள் முகாமுக்கு பாதுகாப்பாக அழைத்துவந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அவரது குடும்பத்தினர், இனிப்பு வழங்கி கொண்டாடினர். ராகேஸ்வர் சிங்கை விடுவிக்க நடவடிக்கை எடுத்த அனைவருக்கும் அவரது குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.