லாரியை முந்தி செல்ல நினைத்த சிறுவன்: அக்கா கண் எதிரே பலியான சோகம்!?

 

லாரியை முந்தி செல்ல நினைத்த சிறுவன்: அக்கா கண் எதிரே பலியான சோகம்!?

டேங்கர் லாரி முந்தி செல்ல நினைத்த சிறுவன் லாரி மோதிய விபத்தில்  தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். 

செங்குன்றம்:  டேங்கர் லாரி முந்தி செல்ல நினைத்த சிறுவன் லாரி மோதிய விபத்தில்  தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். 

செங்குன்றத்தை அடுத்த நல்லூராய் சேர்ந்தவர் செல்வம். இவருக்கு சோனியா என்ற 18 வயது மகளும், ஜெயசீலன் என்ற 13 வயது மகனும் இருந்துள்ளனர். நேற்று காலை வீட்டிலுள்ள  பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை மாதவரத்தில் கடையில் போடுவதற்காகச்  சோனியா  மற்றும் ஜெயசீலன்  இருசக்கர வாகனத்தில் கிளம்பியுள்ளனர். 

murder

அப்போது வடகரை ஊராட்சி அலுவலகம் அருகே வந்தபோது  பின்னால் டேங்கர் லாரி ஒன்று வந்துள்ளது. அப்போது டேங்கர் லாரியை முந்தி செல்ல நினைத்த ஜெயசீலன் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் 
ஜெயசீலன் தலையின் மீது  லாரி சக்கரம் ஏறி இறங்கியதால் அவர் தலை நசுங்கிய நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சோனியா காயங்களுடன் உயிர் தப்பினார். 

accident

இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், ஜெயசீலன்  உடலை கைப்பற்றி ஸ்டான்லி  மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் 
விபத்து குறித்து  வழக்குப்பதிவு செய்த போலீசார், டேங்கர் லாரி டிரைவர்  முருகானந்தம் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அக்கா கண் எதிரே தம்பி விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.