பிரியங்கா சோப்ராவின் உறவினரிடம் கத்தி முனையில் வழிப்பறி !
செக்ஷன் 375 படத்தின் நாயகியான மீரா சோப்ரா இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு இட்டுள்ளார். அதில் தன்னுடைய தந்தை நேற்று போலீஸ் குடியிருப்பு பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது 2 மர்மநபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.
டெல்லியில் பிரியங்கா சோப்ராவின் உறவினர் மீரா சோப்ராவின் தந்தையிடம் கத்திமுனையில் மர்மநபர்கள் செல்போனை பறித்து சென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
செக்ஷன் 375 படத்தின் நாயகியான மீரா சோப்ரா இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு இட்டுள்ளார். அதில் தன்னுடைய தந்தை நேற்று போலீஸ் குடியிருப்பு பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது 2 மர்மநபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். என் தந்தையிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரது செல்போனை பறித்து சென்றனர். டெல்லி எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறது என்று பாருங்கள் என பதிவிட்டுள்ளார். பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளதாக கூறிய மீரா சோப்ரா, போலீசார் வழங்கிய முதல் தகவல் அறிக்கையின் நகலையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து யாருக்கேனும் தெரிந்தால், தொலைபேசி மூலமாகவும் அல்லது இமெயில் மூலமாக தெரிவிக்குமாறும் கேட்டுக்கொண்டார். இதற்கிடையே அவரது செல்போன் கண்டுபிடிக்கப்பட்டு டெல்லி காவல்துறையால் ஒப்படைக்கப்பட்டது. இதற்கு பதில் அளித்து பதிவிட்டுள்ள மீரா சோப்ரா விரைவான நடவடிக்கை எடுத்த காவல்துறைக்கு நன்றி தெரிவித்தார். காவல்துறையினரால் நாங்கள் பாதுகாக்கப்படுகிறோம் என்பதை உணரும்போது பெருமை சேர்க்கிறது. ஆனால் முதியவர்களை பாதுகாப்பது மிக முக்கியமானது! என்றும் வேண்டுகோள் வைத்தார்.
@DelhiPolice my dad was taking a walk in #policecolony. 2 guys came in a scooter, showed knife and snatched his phone. This is how safe you claim delhi to be. @ArvindKejriwal @CPDelhi
— meera chopra (@MeerraChopra) May 5, 2020
மீரா 2014 ஆம் ஆண்டில் “கேங் ஆப் கோஸ்ட்ஸ்” படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். பின்னர் அவர் “1920 லண்டன்” மற்றும் “செக்ஷன் 375” போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் பிரியங்கா சோப்ராவின் உறவினர் பெண் ஆவார்.