தந்தையால் ரூ. 10,000-க்கு விற்கப்பட்ட இளம்பெண்: பாலியல் கொடுமை தாங்க முடியாமல் தீக்குளித்த துயரம்!?

 

தந்தையால் ரூ. 10,000-க்கு விற்கப்பட்ட இளம்பெண்: பாலியல் கொடுமை தாங்க  முடியாமல் தீக்குளித்த துயரம்!?

தொடர் பாலியல் வன்கொடுமையில் சிக்கிய இளம்பெண் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப்பிரதேசம் : தொடர் பாலியல் வன்கொடுமையில் சிக்கிய இளம்பெண் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

harassment

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் அருகே ஹபூர் பகுதியைச் சேர்ந்த ஒரு 27 வயது இளம்பெண் சமீபத்தில் கணவரை இழந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பெண்ணை அவரது தந்தையும், உறவுக்கார பெண்ணும் சேர்ந்து ஒருவரிடம் 10,000 ரூபாய்க்கு விற்றுள்ளனர். இதையடுத்து பல வீடுகளுக்கு வீட்டு வேலைக்கு அனுப்பிய அந்த பெண்ணை  பலரும் பாலியல்  வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். மேலும் அந்தப் பெண்ணை அவர்கள் சித்ரவதையும் செய்துள்ளனர். 

harassment

ஒருகட்டத்தில் கொடுமை தங்க முடியாமல் அந்த பெண் போலீசில் புகார் கொடுக்க சென்றுள்ளார்.  இருப்பினும் அவரது புகாரை  ஏற்க போலீசார் மறுத்துள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் கடந்த மாதம் 28ம் தேதி தீவைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து 70% தீக்காயங்களுடன் அப்பெண்ணை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். 

fire

இதையடுத்து இந்த விவகாரம் குறித்து தற்போது 16 பேர் மீது வழக்குப்பதிவு  செய்யப்பட்டுள்ளது. மேலும் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு டெல்லியிலுள்ள தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மலிவால், இந்த பாலியல் வன்கொடுமை வழக்கிற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.