தங்கள் திருமணத்தை நடத்த, இளம்பெண்ணை எரித்துக் கொன்ற காதல் ஜோடி.. அதிர வைக்கும் சம்பவம்!

 

தங்கள் திருமணத்தை நடத்த, இளம்பெண்ணை எரித்துக் கொன்ற காதல் ஜோடி.. அதிர வைக்கும் சம்பவம்!

சார்ச்சா என்னும் பகுதியில் உள்ள மொபைல் கம்பெனி ஒன்றில் பூனம் என்ற இளம்பெண் வேலை பார்த்து வந்தார்.

நொய்டா, சார்ச்சா என்னும் பகுதியில் உள்ள மொபைல் கம்பெனி ஒன்றில் பூனம் என்ற இளம்பெண் வேலை பார்த்து வந்தார். இவரின் உடல் கடந்த 26 ஆம் தேதி கொலை செய்யப்பட்டு, எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த இளம்பெண்ணின் கொலை குறித்து தீவிர விசாரணையில் இறங்கிய போலீசார், பூனத்துடன் வேலை பார்த்து வந்த லந்த்சாஹர் பகுதியை சேர்ந்த கபில் என்ற இளைஞரும், ரூபி என்ற பெண்ணும் இக்கொலையில் ஈடுபட்டிருப்பதைக் கண்டு பிடித்துள்ளனர்.  

ttn

அதன் பின்னர் அவர்கள் இரண்டு பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் பூனத்தின் கொலை குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது, அவர்கள் அளித்த வாக்குமூலம் போலீசாரை அதிர வைத்துள்ளது. அதில் கபில், தங்களது திருமணத்துக்கு ரூபி வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால், அவர்களை ஏமாற்றுவதற்காக பூனத்தை காதல் செய்வது போல நடித்து, மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்று அவரை எரித்துக் கொன்று விட்டதாக கூறியுள்ளார். 

ttn

அதாவது, பூனத்தின் சடலத்துக்கு அருகில் ரூபியின் பொருட்களைப் போட்டுவைத்து விட்டு, அது ரூபி தான் என்று அவரின் பெற்றோர்களை நம்ப வைத்ததாகவும், அதன் பின்னர் தங்கள் இரண்டு பேரும் திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். தங்களது திருமணத்தை நடத்திக் கொள்ளச் சம்பந்தமே இல்லாத ஒரு பெண்ணை காதல் ஜோடி எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.