சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தாத்தா: டிவி பார்க்க சென்ற இடத்தில் நடந்த கொடூரம்!?
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தாத்தா முறை உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அருப்புக்கோட்டை: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தாத்தா முறை உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள அரசு பள்ளியில் 15 வயது மனைவி ஒருவர் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். மாணவிக்கு அம்மா, அப்பா இல்லாத காரணத்தினால் அவர் தனது அத்தையின் வீட்டில் தங்கிப் படித்து வந்துள்ளார். பள்ளி விடுமுறை நாட்களில் சிறுமி அதே பகுதியைச் சேர்ந்த தாத்தா முறை கொண்ட கருப்பையா வீட்டிற்கு செல்வது வழக்கம்.
இந்நிலையில் சில நாட்களாகச் சிறுமி உடல் சோர்வாலும், வயிற்று வலியாலும் அவதிப்பட்டுள்ளார். இதனால் அவரது அத்தை சந்தேகமடைந்து சிறுமியைச் சோதித்துப் பார்த்தபோது சிறுமி வயிறு பெரிதாக இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது அத்தை சிறுமியிடம் நடந்தவற்றை விசாரிக்க, டிவி பார்க்கச் செல்லும் போது தாத்தா கருப்பையா தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததைக் கூறியுள்ளார்.
இதுகுறித்து கட்டனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முதியவர் கருப்பையாவைக் கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இதையடுத்து சிறுமியை சோதித்த மருத்துவர்கள் அவர் 5 மாத கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தனர்.
இதை தொடர்ந்து சிறுமியின் வாக்குமூலத்தை அடுத்து 70 வயதான கருப்பையாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது.