சந்தேகத்தால் கொடூரம்… முகத்தைச் சிதைத்து, டேப்பால் சுற்றி மனைவியை கொன்று எரித்த கணவன்

 

சந்தேகத்தால் கொடூரம்… முகத்தைச் சிதைத்து, டேப்பால் சுற்றி மனைவியை கொன்று எரித்த கணவன்

சட்டீஸ்கர் மாநிலம் பிலாய் நகரைச் சேர்ந்தவர் ரவி ஷர்மா. இவர் தன் மனைவி மஞ்சு மற்றும் ஒன்றரை மாத குழந்தையுடன் தால்புரி என்ற இடத்தில் வசித்துவந்தார். ஜனவரி 21ம் தேதி அதிகாலை மஞ்சுவின் பெற்றோருக்கு போன் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், “உங்கள் மகள் மற்றும் மருமகன் தீயில் எரிந்துகொண்டிருக்கிறார்கள். முடிந்தால் காப்பாற்றிக்கொள்ளுங்கள்” என்று கூறி அழைப்பைத் துண்டித்துள்ளார். இதனால் அவர்கள் போலீசில் இது பற்றி தகவல் தெரிவித்தனர். 

சட்டீஸ்கர் மாநிலத்தில் மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக அவரையும் இளைஞர் ஒருவரையும் குழந்தையையும் கொடூரமான முறையில் கொன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சட்டீஸ்கர் மாநிலம் பிலாய் நகரைச் சேர்ந்தவர் ரவி ஷர்மா. இவர் தன் மனைவி மஞ்சு மற்றும் ஒன்றரை மாத குழந்தையுடன் தால்புரி என்ற இடத்தில் வசித்துவந்தார். ஜனவரி 21ம் தேதி அதிகாலை மஞ்சுவின் பெற்றோருக்கு போன் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், “உங்கள் மகள் மற்றும் மருமகன் தீயில் எரிந்துகொண்டிருக்கிறார்கள். முடிந்தால் காப்பாற்றிக்கொள்ளுங்கள்” என்று கூறி அழைப்பைத் துண்டித்துள்ளார். இதனால் அவர்கள் போலீசில் இது பற்றி தகவல் தெரிவித்தனர். 

triple murder

அதிகாலையில் ரவியின் வீட்டுக்கு போலீசார் சென்று கதவை உடைத்து உள்ளே சென்றபோது மஞ்சுவும் இன்னொரு ஆணும் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தனர். இருவருடைய கை, கால்கள் கட்டப்பட்டு இருந்தன. முகம் முழுவதும் டேப் சுற்றப்பட்டு இருந்தது. ஒன்றரை வயது குழந்தையும் கொலை செய்யப்பட்டு கிடந்தது. உடன் உடலை ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மருத்துவர்கள் சடலத்தின் டேப்பை அகற்றியபோது முகம் சிதைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இறந்த ஆண் சடலம் ரவியுடையது இல்லை என்பதையும் உறுதி செய்தனர். 
வீட்டை ஆய்வு செய்தபோது, கதவு ஒன்றின் பின்புறம், “மஞ்சுவுக்கு பல ஆண்களுடன் பழக்கம் இருந்தது. அவளால்தான் என் தம்பி தற்கொலை செய்துகொண்டான். அதனால் அவளைக் கொலை செய்தேன். மீதமுள்ளவர்களையும் கொலை செய்வேன்” என்று எழுதப்பட்டு இருந்தது. இதன் மூலம் இந்த கொலைகளைச் செய்தது மஞ்சுவின் கணவன் ரவிதான் என்பது உறுதியானது. மேலும் ரவி உயிரோடு இருப்பதும் உறுதியானது.

கொலைக்கு பின் எழுதப்பட்ட குறிப்பு

இதைத் தொடர்ந்து அதிகாலை நேரத்தில் மஞ்சுவின் பெற்றோருக்கு வந்த போன் கால் எங்கிருந்து வந்தது என்று போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அருகில் உள்ள துர்க் ரயில் நிலையத்திலிருந்து வந்திருப்பது தெரிந்தது. இதைத் தொடர்ந்து ரவியை பிடிக்கும் தேடுதலில் இறங்கிய போலீசார் ரூர்கேலா ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்தனர். 
பிலாய்க்கு அழைத்துவந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவன், “மஞ்சுவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்தது. முதல் கணவன் மஞ்சுவை கைவிட்டுவிட்டு, மஞ்சுவின் சகோதரியை திருமணம் செய்துகொண்டான். அதனால் நான் மஞ்சுவுடன் வாழ்ந்துவந்தேன். ஆனால் மஞ்சு மீது எனக்கு சந்தேகம் இருந்துவந்தது. இதனால் அவளைக் கொடூரமாகக் கொலை செய்தேன். தடயத்தை அழிக்கத் திட்டமிட்டு முகத்தில் டேப் சுற்றினேன். நானும் இறந்துவிட்டேன் என்று நம்பவைக்க இன்னொரு ஆணை கொன்று ஒன்றாக கட்டி வைத்து எரித்தேன். ஆனால் சிக்கிக்கொண்டேன்” என்று கூறியுள்ளார். கொலை செய்யப்பட்ட மற்றொரு ஆண் யார் என்று போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.