குடிபோதையில் வேகமாக பைக்கில் சென்ற நபர்கள்.. தட்டிக் கேட்ட இளைஞர் குத்திக் கொலை!

 

குடிபோதையில் வேகமாக பைக்கில் சென்ற நபர்கள்.. தட்டிக் கேட்ட இளைஞர் குத்திக் கொலை!

தனை தடுக்க முயன்ற விஷ்ணுவின் தம்பியையும் அந்த கும்பல் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளது. 

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ளது சக்கரை செட்டியப்பட்டியில், 3 பைக்குகளில் வந்த 6 பேர் மது போதையில் வண்டியை அதிவேகமாக ஓட்டிச் சென்றது மட்டுமில்லாது கூச்சலிட்ட படியே சென்று கொண்டிருந்துள்ளனர். இதனை பார்த்த இளைஞர் விஷ்ணுபிரியன், அவர்களை வழிமறித்து மெதுவாக செல்லுமாறு கூறியிருக்கிறார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் விஷ்ணுபிரியனை அந்த கும்பல் கத்தியால் குத்தியுள்ளது. அப்போது அதனை தடுக்க முயன்ற விஷ்ணுவின் தம்பியையும் அந்த கும்பல் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளது. 

tt

இந்த சம்பவத்தை பார்த்த ஊர்மக்கள் அந்த 6 பேரில் ஒருவரை மட்டும் துரத்தி பிடித்துள்ளனர். இதனையடுத்து கத்தியால் குத்தப்பட்ட விஷ்ணுபிரியன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். மேலும், அவரது தம்பி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார். பிடிபட்ட நபரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்ல முயன்ற போது அப்பகுதி மக்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

ttn

 

அதன் பின்னர் அங்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, விஷ்ணுவை கொலை செய்த நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று உறுதி அளித்ததும் மக்கள் அந்த நபரை விடுவித்துள்ளனர். அந்த போதை கும்பல் விட்டுச் சென்ற வாகனங்களை கைப்பற்றிய போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.